யு.பி.எஸ்.ஆர் தேர்வு முறையில் மாற்றம்

யு.பி.எஸ்.ஆர் தேர்வு முறையில் மாற்றம்

upsr

செப்டம்பர் 29, யு.பி.எஸ்.ஆர் ஆங்கில தேர்வு தாள் அடுத்த ஆண்டு முதல் இரு பிரிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் இரு பிரிவாகவே வெளியிடப்படும். இந்த ஆங்கில தாள் மாற்றங்களை கல்வி தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியது என தேர்வு அமைச்சின் மேலாளர் டத்தின் நாவால் சாலே தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் 6 முதல் 8 தேர்வுகளை எழுதுவார்கள் என்று மேலும் அவர் கூறினார்.

அறிவியல் தேர்வு முறையிலும் அடுத்த ஆண்டு முதல் இரு பிரிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில் மாற்றம் இல்லை என்றார்.