ம.இ.கா புத்ராவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகள்

ம.இ.கா புத்ராவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகள்

16387291_10212046489103949_4835323149702459815_n

2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட  ம .இ.கா புத்ராவின் 10 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக பப்ளிக் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் இந்திய மாணவர்களை ஒன்றிணைக்கும் விதமாக பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளை பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை ம.இ.கா புத்ரா நடத்துகின்றது. இந்த போட்டிகள் UPM Sports Centreஇல் நடைபெறுகின்றன.

மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கால்பந்து மற்றும் பேட்மிட்டன் போட்டிகள் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும்

ம.இ.காவின் தலைவரும் சுகாரத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ Dr. சு. சுப்ரமணியன் அவர்கள் இந்த விளையாட்டு போட்டிகளை அதிகாரப் பூர்வமாக பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு UPM Sports Centre இல் துவக்கி வைக்க உள்ளார்.