மழை வெள்ளத்தில் சூழ்ந்தது திரங்கானு பல்கலைக்கழகம்

மழை வெள்ளத்தில் சூழ்ந்தது திரங்கானு பல்கலைக்கழகம்

DSCF0685

நவம்பர் 20, தற்போது மலேசியாவில் எங்குப் பார்த்தாலும் கனத்த மழை , வெள்ளம் தான். இதனால் பல இடங்களில் நில சரிவு ஏற்பட்டு இதில் சில பொது மக்கள் மரணமும் அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்யும் கனத்த மழையால் ஏற்படும் வெள்ளத்தால் பலரது தினசரி நடவடிக்கைகள் தடைப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திரங்கானுவில் தொடர்ந்துப் பெய்ந்த பேய் மழையில் திரங்கானு பல்கலைக்கழகம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியாமலும் தன் சொந்த வீட்டிற்கும் திரும்ப முடியாமல் தவிர்த்து வருகின்றனர்.