மலேசியாவில் நடுவானில் வெடித்து சிதறியது 2 விமானங்கள்

மலேசியாவில் நடுவானில் வெடித்து சிதறியது 2 விமானங்கள்

int

மார்ச் 16, கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தோனேஷியாவை சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நேற்று மாலை நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கையில் மற்றொரு விமானம் மோதியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து சிதறின. இந்த 2 விமானங்களின் விமானிகள் அனைவரும்  பாராசூட் மூலம் உயிர் தப்பினார்கள். அந்த 2 விமானங்களில் இருந்து வெடித்து சிதறிய பாகங்கள் அருகில் இருந்த வீடுகளின் மீதும் கார்களின் மீதும் எரிந்தபடி விழுந்ததால், அவை தீப்பற்றி எரியத் தொடங்கின. இதுகுறித்து தகவல் அறிந்த லங்காவி போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.