மலாக்காவில் இந்தியர்களுக்காக சமூக மண்டபம் டாக்டர் சுப்ரா அறிவிப்பு

மலாக்காவில் இந்தியர்களுக்காக சமூக மண்டபம் டாக்டர் சுப்ரா அறிவிப்பு

20july_malacadrsubra_3

ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியில் விரைவில் மலாக்காவில் இந்தியர்களுக்காக சமூக மண்டபம்.

அந்த மண்டபம் பத்து பெரண்டாமிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான வளாகத்தில் கட்டப்படும். அதன் கட்டுமானப் பணிகளுக்காக அரசாங்கம் ஐந்து லட்சம் ரிங்கிட்டை வழங்கியுள்ளது. அதற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்ச்சி இன்று 20/07/2017  மலாக்காவில் நடைபெற்றது. சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் அதற்கான மாதிரி காசோலையை பத்து பெரண்டம் ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான தலைவர் திரு. மனோகரன் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் தேவஸ்தான பொறுப்பாளர்களுடன், மாநில ம இ கா தலைவர்களும் சமூக இயக்கங்களின் பொறுப்பாளர்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோஸ்ரீ, மலாக்காவில் இந்தியர்களுக்காக ஒரு மண்டபம் கிடையாது. இந்த மண்டபம் மலாக்கா இந்தியர்களுக்குச் சொந்தமானதாகும். எனவே, தேவஸ்தானம் மலாக்காவிலுள்ள அனைத்து இயக்கங்களுடன் இணைந்து இந்த மண்டபத்தை அமைக்க முன்வரும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

20july_malacadrsubra_2 20july_malacadrsubra_4