மக்கள் குழப்பமடைய வேண்டாம் : சுகாதார அமைச்சர்

மக்கள் குழப்பமடைய வேண்டாம் : சுகாதார அமைச்சர்

mal1

எபோலா மற்றும் டெங்கி காய்ச்சல் நோய்களுக்கான அறிகுறிகளில் ஒற்றுமை இருப்பதால் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார். எபோலா அல்லது டெங்கி பாதித்தவர்களுக்கு காய்ச்சல்,  தசை வலி, தலை வலி, தொண்டை வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்படும் என  அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தார்.