போதையில் தன்ஷிகாவிடம் வாக்குவாதம் செய்த ஒருவரை சரமாரியாக அடித்தார்

போதையில் தன்ஷிகாவிடம் வாக்குவாதம் செய்த ஒருவரை சரமாரியாக அடித்தார்

dhan

டிசம்பர் 17, பேராண்மை, அரவான் படங்களில் நடித்திருப்பவர் தன்ஷிகா. ‘காத்தாடி’ படத்துக்காக கேரளாவில் வாகமன் பகுதியில் படப்பிடிப்பு நடத்த குழுவினர் சென்றனர். படப்பிடிப்பை காண கூட்டம் கூடியது. சிலர் குடித்துவிட்டு வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அவர்கள் தன்ஷிகாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அங்கிருந்த மேனேஜரிடம் கேட்டனர். அவர்கள் குடித்திருப்பதை அறிந்த மேனேஜர் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை.இதில் கோபம் அடைந்த ஒருவர் மேனேஜரை திடீரென்று தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. தகராறு செய்தவர்களை பிடிக்க மேனேஜர் முயன்றார். கேரவனிலிருந்து கண்ணாடி வழியாக இதை கண்ட தன்ஷிகா கோபம் அடைந்தார். வேனிலிருந்து இறங்கி வந்த அவர் வம்பு செய்தவர்களை நோக்கி சென்றார்.

மேனேஜரை ஏன் தாக்கினீர்கள் என கண்டித்தார். அப்போது போதை ஆசாமிகளுக்கும் தன்ஷிகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த தன்ஷிகா திடீரென போதை ஆசாமி ஒருவரை சரமாரியாக அடித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூட்டம் கூடிவிட்டது. தன்ஷிகாவை தாக்க போதை ஆசாமிகள் முயன்றபோது யூனிட் ஊழியர்கள் அவர்களை தடுத்தனர். பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று கேரவனில் அமர வைத்தனர்.இந்த சம்பவம் பற்றி இயக்குனர் கல்யாண் கூறும்போது, ‘இப்படியொரு பிரச்னை ஏற்படும் என நினைக்கவில்லை. இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தோம். அவர்கள் தகராறு செய்தவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினார்கள். தன்ஷிகாவின் தைரியத்தை படக்குழு பாராட்டியது’ என்றார்.