பெற்றோரை இழந்த மாணவி PT3 தேர்வில் சாதனை

பெற்றோரை இழந்த மாணவி PT3 தேர்வில் சாதனை

pt3

டிசம்பர் 23, இவ்வாண்டு நடந்து முடிந்த படிவம் மூன்றுக்கான PT3 தேர்வில், பெற்றோரை இழந்த மாணவி நுருல் ஹுடா சுகி 10A பெற்று சாதனை புரிந்துள்ளார்.
பெற்றோர் இன்றி வயதான பாட்டியின் பராமரிப்பில் இருந்து வரும் நுருல் ஹுடா, தம் பாட்டியின் அயராத தன்முனைப்பாலும் பாசத்தாலும் தான் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றதாக கூறினார்.
இதனிடையே, பெற்றோரை இழந்த பிறகு, பாட்டியின் அரவணைப்பில் கல்வி பயின்று வந்த நுருல், இந்த வெற்றியை மரண படுக்கையில் இருக்கும் தம் பாட்டியுடன் பகிர்ந்துக்கொள்ள முடியவில்லையே என கண்ணீருடன் கூறினார்.