“புதியதோர் சமுதாயம்” மருத்துவ மற்றும் சமூக முகாம்

“புதியதோர் சமுதாயம்” மருத்துவ மற்றும் சமூக முகாம்

1544291_580632118708351_216472165292189719_n 10641195_10152504875057701_6836732965603290703_n

ஷாஆலம், சிலாங்கூர்- இன்று 21/9/2014  காலை  SITF Special Implementation Task Force ஆதரவுடன் தமிழ் மணி மன்ற ஏற்பாட்டில் புதியதோர் சமுதாயம் என்ற தலைப்பில் மருத்துவ மற்றும் சமூக முகாம் தாமான் ஸ்ரீ மூடா (2) பள்ளியில்  நடத்தப்பட்டது. 800 பேர் கலந்துகொண்ட இந்த முகாமில் பல்வேறு மருத்துவ பரிசோதனை மற்றும் சமுதாய ஆலோசனை சந்திப்புகள் நடத்தப்பட்டன. மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் அவர்கள் இந்நிகழ்வை துவக்கி வைத்தார். ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.C.சிவராஜ் மற்றும் பல பிரமுகர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.

“இந்திய சமுதாயத்தில் சுகாதார விழிப்புணர்வு அதிகம் தேவை. நம் நாட்டில் இந்தியர்களுக்கு அதிகமான உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன .நம் வாழ்க்கை முறைகளில் பெரிய மாற்றம் தேவை.நம் உடலை நாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் வரவேண்டும். உணவு முறையில் மாற்றங்கள்  அத்திய ஒன்றாகும். உடற்பயிற்சி நோயற்ற வாழ்வுக்கு அவசிய தேவையாகும்” என மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்தார்.

15771_580632865374943_106432068584172856_n 10616610_580632808708282_8039542044908127943_n 10610853_580632795374950_3548886201317123588_n 10418897_580632845374945_2999036823064901253_n