இந்திய-சீன செய்தியாளர்களுக்கிடைய நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து.

இந்திய-சீன செய்தியாளர்களுக்கிடைய நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து.

3

 

ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் சீன ராணுவத்தினர் மீண்டும் ஊடுருவலில் ஈடுபட்டு வரும் நிலையில்,டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. சீன செய்தியாளர்கள் டெல்லி வருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவின. இதனையடுத்து வரும் 24-ம் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுவதற்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகையாளர்களுக்கு இந்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. ஆனால், திடீரென அந்த அனுமதியை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.