பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனுக்கு காவல் நீட்டிப்பு.

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனுக்கு காவல் நீட்டிப்பு.

3

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட அருண் செல்வராசனை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேசிய புலனாய்வு போலீசார் கடந்த 12-ந் தேதி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண் செல்வராசன் கோர்ட்டில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து அருண் செல்வராசனை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 18ந் தேதி மதியம் 12 மணி முதல் 23ந் தேதி மாலை 4.30 மணி வரை விசாரிக்கலாம் என அனுமதி அளித்தது.