பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 11 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 11 தீவிரவாதிகள் பலி

Tehrik-e-taliban-620x465

டிசம்பர் 11, பாகிஸ்தானில் கைபர் மாவட்டம் திரா பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. தலீபான் மற்றும் தடை செய்யப்பட்ட மற்றொரு தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ இஸ்லாம் என்ற அமைப்பின் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.

தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,600 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அதே சமயம் 126 வீரர்களையும் பாகிஸ்தான் இழந்துள்ளது. ஆனால், மனித உரிமை அமைப்புகள் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பெரும்பாலான அப்பாவி பொதுமக்கள் இறந்து இருப்பதாக குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.