பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 11 தலிபான்கள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 11 தலிபான்கள் கொல்லப்பட்டனர்

Flight

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 11 தலிபான் போராளிகள் பலியாகினர். 

அமெரிக்க உளவுப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, டட்டாகேல் பகுதியின் டோகாகேல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்க ஆளில்லா போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 11 தலிபான்கள் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், பலியானவர்கள் அனைவரும் இந்திய எல்லையோரம் உள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பலம் வாய்ந்த போராளிகள் குழுவாக திகழ்ந்தவர்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் 18 தலிபான் போராளிகள் பலியாகினர். கடந்த ஜுன் மாதம் 15-ம் தேதியில் இருந்து தலிபான் மறைவிடங்களின் மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய 3 பெரிய தாக்குதல்களில் 450-க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.