பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஆறு தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஆறு தீவிரவாதிகள் பலி

wl3

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின் அங்குள்ள வட மேற்கு பழங்குடியின மாவட்டத்தில் அமெரிக்கா இந்த ஆண்டு முதன் முதலாக நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வடக்கு வசிரிஸ்தானில் உள்ள தர்கா மண்டி கிராமத்தில் ஒரு வாகனத்தின் மீதும் சுற்றுச்சுவர் மீதும் அந்த ஏவுகணை தாக்கியதில் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய ஹக்கானி இயக்கத்தினர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பலியான ஆறு பேரில் நான்கு பேர் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இருவர் பஞ்சாப்பை சேர்ந்த தாலிபான்கள். மத்திய பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த தீவிரவாதிகள் வடக்கு வசிரிஸ்தானை தங்கள் தளமாக பயன்படுத்தி வருவதாக காவல்துறையினர் அப்போது தெரிவித்தனர்.

அங்குள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் அருகே தங்கள் வாகனத்தை அவர்கள் நிறுத்தியிருந்ததாக தெரிவித்த காவல்துறையினர், அங்குள்ள குடியிருப்பு வாசிகள் இன்னும் அங்கு தீ கொழுந்து விட்டு எரிவதாக தெரிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.