பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் உதவி

பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் உதவி

MICBBS

கடந்த 06/09/2014 அன்று பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் தனித்து வாழும் தாய்க்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். இந்த உதவியை  பண்டார் பாரு செலாயாங் ம இ கா தலைவர் திரு. முத்துசாமி வழங்கினார்.  பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. ப்ரசாத் சந்திரசேகரன் உதவி கிடைக்க ஏற்பாடு செய்தார்.

முன்னதாக  பண்டார் பாரு செலாயாங்கை சேர்ந்த தனித்து வாழும் தாயான திருமதி  இந்திரா மளிகை பொருட்கள் வாங்கவும் தனக்கு வேலை கிடைக்கவும் உதவி வேண்டியிருந்தார். அவர் இடைநிலை பள்ளி படிவம் 1 படிக்கும் அவரது மகளுடன் தனித்து வாழ்கிறார்.  அவருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் கோம்பாக் மாவட்ட சுகாதார இலாக்காவில் வேலையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.