பகாங் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அவதி

பகாங் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அவதி

Rain01

டிசம்பர் 22, கடந்த சில வாரங்களாக பகாங், குவாந்தானில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு 27 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் இன்று ஐந்து பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இங்குள்ள பாலாய் ராயா கம்போங் செண்டோர், செராத்திங் ஆகிய பாதுகாப்பு மையங்களில் 19 பேரும், செராத்திங் ஆரம்பப்பள்ளியில் 31 பேரும் மற்றும் சுங்கை உலார் ஆரம்பப்பள்ளியில் 24 பேரும் தங்கி வருகின்றனர். இதனிடையே, வெள்ளத்தின் நீர்மட்டம் 0.45 மீட்டர் உயர்ந்திருப்பதால், அங்குள்ள சில சாலைகள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூடப்பட்டிருப்பதாக குவாந்தான் நீர்ப்பாசன இலாகா தெரிவித்துள்ளது.