நீதிமன்ற வளாகத்தின் தடுப்பு வேலிகளை உடைக்க முயன்ற அன்வார் ஆதரவாளர்கள்

நீதிமன்ற வளாகத்தின் தடுப்பு வேலிகளை உடைக்க முயன்ற அன்வார் ஆதரவாளர்கள்

IBRAHIM-395

நவம்பர் 4, இன்று மதியம் 1.35 மணியளவில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர்கள் புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தின் முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைக்க முயன்ற போது அமளி ஏற்பட்டது.

சில குறிப்பிட்ட கோஷங்களை முழங்கியவாறு அவர்கள் புத்ராஜெயா நீதிமன்ற கட்டிடத்தை நோக்கி வந்த போது போது நிலைமை எல்லை மீறியபோதும், அங்கு பணியிலிருந்த காவல்த்துறை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.