நீதித்துறையை மக்கள் நம்பவில்லை

நீதித்துறையை மக்கள் நம்பவில்லை

malaysia-court

அக்டோபர் 31, மலேசியாவின் நீதித்துறை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என 48 விழுக்காட்டு மலேசியர்கள் கூறியுள்ளனர். மெர்டேகா சென்ட்டர் நடத்திய ஒர் கருத்துக்கணிப்பில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. 1005 பேரிடம் அக்டோபர் 11 முதல் 26 வரை இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 48 விழுக்காட்டினர் நாட்டின் நீதித்துறை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறிய அதே சமயம் 38 விழுக்காட்டினர் தாங்கள் நீதிதுறையை நம்புவதாக தெரிவித்தனர்.