நாம் என்ற உணர்வோடு வருக – புதிய மேம்பாட்டு செயல்முறை இயக்கம் (NAAM)

நாம் என்ற உணர்வோடு வருக – புதிய மேம்பாட்டு செயல்முறை இயக்கம் (NAAM)

10438484_861579073870069_2824397277861525736_n10341739_861579967203313_4228604228051111271_n

மக்கள் முற்போக்கு கட்சியை(PPP) சார்ந்த சுமார் 800 மேற்பட்ட உறுப்பினர்கள்19 ஜுலை 2014  நடந்த நாம் விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாம் திட்டத்தின் இணைவதால் கிடைக்கும் நன்மைகளையும் நாம் திட்டத்தில் உறுப்பினராகும் வழிமுறைகளையும்,இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் நாம் அறவாரியத்தின் தலைவர் டத்தோ M.சரவணன் அவர்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு விளக்கினார். நாம் திட்டத்தின் முதல் விவசாய திட்டமான மிளகாய் பயிரிடுதல் பற்றிய விவரங்களை அவர் விளக்கினார். சந்தையில் மிளகாய்க்கு நல்ல விலையும் தேவையும் இருப்பதால் மிளகாய் சாகுபடி நாம் திட்டத்தின்கீழ் முதல் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக டத்தோ M.சரவணன் தெரிவித்தார். மிளகாய் சாகுபடி மூலம் குறைந்த காலத்தில் நிறைவான வருவாய் ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். உழைக்கத் தயாராய் இருக்கும் இளைஞர்களை நாம் திட்டம் வரவேற்கிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகிய மக்கள் முற்போக்கு கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ கேவியஸ் நாம் திட்டத்தின் திட்டங்கள் சிறப்பானவையாக இருப்பதாக தெரிவித்தது மட்டுமல்லாமல் இத்திட்டத்தில் தம் கட்சியினர் இணைந்து பயன்பெறுவார்கள் எனவும் உறுதியளித்தார்.

http://www.youtube.com/watch?v=CjqN6uCbUaM