நடிகர் திலகத்திற்கு மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவுபெறும் இயக்குனர் விஜயசிங்கம்

நடிகர் திலகத்திற்கு மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவுபெறும் இயக்குனர் விஜயசிங்கம்

vijeyasingamsivajimanimandabam1

15 அண்டுகள் காத்திருப்பிற்கு பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் சென்னை அடையாற்றில் முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. அடுத்த சில நாட்களில் மணிமண்டப பணிகள் முழுதாய் முடிவடைந்து மணிமண்டபம் திறக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என தெரிகிறது.

இது தொடர்பாக மலேசிய இந்திய தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் இயக்குனர் விஜயசிங்கம், நடிகர் திலகத்தின் வாழ்க்கை குறிச்சு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள முனவர். மருது மோகன் மற்றும் சிவாஜி கணேசன் சமூக நல பேரவை தலைவர் திரு. சந்திரசேகர் ஆகியோர் இது தொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். இந்த பேட்டியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் செய்திகள் இந்த மணிமண்டபத்தில் விரிவாக தொகுக்கப்பட்டு வைக்கப்படுமானால் எதிர்கால கலைஞர்களுக்கு அவை பாடமாக இருக்கும் என்றும் சிவாஜி கணேசனின் புகழ் உலகம் முழுதும் புகழ்ந்து பேசப்படும் எனவும் இயக்குனர் விஜயசிங்கம் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

[vsw id=”_fnKIEFTS2M” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

vijeyasingamsivajimanimandabam vijeyasingamsivajimanimandabam2 vijeyasingamsivajimanimandabam3 vijeyasingamsivajimanimandabam4