தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 15 பேர் பலி

தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 15 பேர் பலி

flightriver

பிப்ரவரி 4, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.
தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்தது. இதுவரை விமானத்தில் பயணம் செய்த 15 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 30 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
53 பயணிகளுடன் 5 பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.