துணைக் காவல்படை பட்டமளிப்பு விழா 06/07/2017 நடைபெறுகிறது

துணைக் காவல்படை பட்டமளிப்பு விழா 06/07/2017 நடைபெறுகிறது

04julypolicegraduation_1

எதிர்வருகின்ற வியாழக்கிழமை 06/07/2017 அன்று மதியம் 1.30 மணி முதல் மாலை 04 மணி வரை ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் துணைக் காவல்படை பட்டமளிப்பு விழா 2017 நடைபெறவிருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியாட் அனாக் ஜேம், காவல் துறை ஐ.ஜி தன்ஸ்ரீ டத்தோஸ்ரீ காலித் பின் அபு பக்கர் மற்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த பட்டமளிப்பு விழாவில் மாநில இளைஞர் பிரிவு தலைவர்கள் , தொகுதி இளைஞர் பிரிவு தலைவர்கள், மாநில இளைஞர் படை தலைவர்கள், தொகுதி இளைஞர் படை தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ம.இ.கா தேசிய இளைஞர் படை தலைவர் திரு. K.சுந்தரம் வெளியிட்டுள்ள அழைப்பிதழ் செய்தியில் கூறியுள்ளார்.