திருநங்கைகலை பெண்கள்போல் மதிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

திருநங்கைகலை பெண்கள்போல் மதிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

periyarthalam

நவம்பர் 7, திருநங்கைகளுக்கு பெண்கள்போல் உடை அணியவும் பாவனை செய்யவும் உரிமை உண்டு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

பெண்களைப் போல் நடந்துகொள்ளும் முஸ்லிம் ஆண்களைத் தண்டிக்கும் ஷியாரியா குற்றவியல் (நெகிரி செம்பிலான்) இணைப்புச் சட்டம் பகுதி 66, கூட்டரசு அரசமைப்புக்கு முரணானது என நீதிபதி ஹிஷாமுடின் முகம்மட் யூனுஸ் தீர்ப்பளித்தார். எனவே, அது செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது.