திரங்கானு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது

திரங்கானு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 47ஆக  உயர்ந்துள்ளது

bridge (1)

நவம்பர் 18, திரங்கானு மாநிலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை காட்டிலும் தற்போது 47 பேராக உயர்ந்துள்ளது.
செண்டெரிங் மற்றும் கொங் படாக் ஆகிய இடங்களைச் சேர்ந்த 15 குடும்பங்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, 10 குடும்பங்களைச் சார்ந்த 38 பேர் செண்டெரிங் ஆரம்பப்பள்ளியிலும் இன்னும் 8 பேர் சிவிக் கோங் படாக் மண்டபத்திலும் பாதுகாப்பாக தங்கியுள்ளனர். இந்நிலையில் திரங்கானுவில் வானிலை மேகமூட்டமாகவும் தொடர்ந்து மழையாகவும் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.