திரங்கானுவில் வெள்ளம்: நிலைமை சீரடைந்து வருகிறது

திரங்கானுவில் வெள்ளம்: நிலைமை சீரடைந்து வருகிறது

images (10)

நவம்பர் 23, கடந்த ஒரு வார காலமாக திரங்கானுவில் வெள்ளம் ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு நிலைமை மெல்ல சீரடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு மையத்திலிருந்த சில குடும்பங்கள் மீண்டும் அவர்களது குடியிருப்பு பகுதிகளுக்கு திரும்பியுள்ளனர்.

திரங்கானு பாதுகாப்பு மையத்தின் தகவலின் அடிப்படையில் கிட்டத்தட்ட 2,741 பேர் அங்குள்ள 15 பாதுகாப்பு மையங்களில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏறத்தாழ 1,138 பேர் சனிக்கிழமை மதியத்திற்கு பின்னர் தத்தம் குடியிருப்பு பகுதிகளுக்கு அனுப்பப்படுவர் எனவும் திரங்கானு பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.