அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 50 லட்சம் பேருக்கு குடியுரிமை

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 50 லட்சம் பேருக்கு குடியுரிமை

Barack Obama

நவம்பர் 22, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 50 லட்சம் பேருக்கு அதிபர் ஒபாமா தனது அதிகாரத்தை பயன்படுத்தி குடியுரிமையை நேற்று வழங்கினார். அமெரிக்காவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எச் 1 பி எனப்படும், பணி புரிவதற்கான விசாவில் சென்று, அங்கு நீண்ட நாட்களாக இருந்து வருபவர்கள். இவ்வாறு அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து, அவர்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு, 1.1 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில், 45 லட்சம் பேர் இந்தியர்கள். இந்த நிலையில், சட்டவிரோதமாக குடியேறிய 50 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கி அதிபர் ஒபாமா நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பான அமெரிக்க குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதில், அமெரிக்க குடிமக்கள் அல்லது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோர், அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள் என்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஒபாமா அரசின் மிக முக்கிய நடவடிக்கையாக இந்த சட்ட திருத்தம் கருதப்படுகிறது. இதுகுறித்து, அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் நேற்று பேசியதாவது: சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள 1 கோடிக்கும் அதிகமானோரை, வெளியேற்றுவது என்பது, முடியாத காரியம்; அதே வேளையில், நம்முடைய குணத்துக்கும் அது எதிரானது. எதிர்காலத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் ஏற்படாதவாறு, நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெளிநாட் டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் இங்கேயே தங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களும் பங்களிப்பார்கள் என்றார்.