திரங்கானுவில் பாதுகாப்பு மையங்கள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு

திரங்கானுவில் பாதுகாப்பு மையங்கள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு

images (10)

நவம்பர் 28, கடந்த ஒரு வார காலமாக திரங்கானுவில் வெள்ளம் ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு நிலைமை மெல்ல சீரடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு மையத்திலிருந்த சில குடும்பங்கள் மீண்டும் அவர்களது குடியிருப்பு பகுதிகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, திரங்கானுவில் ஏற்பட்டிருந்த வெள்ளத்தின் நிலை ஓரளவு சீரடைந்திருப்பதால் அங்குள்ள பாதுகாப்பு மையங்கள் இன்று முதல் மூடப்படுவதாக திரங்கானு தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.