தாமான் செலாயாங் பாருவில் ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்

தாமான் செலாயாங் பாருவில் ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்

death (1)

டிசம்பர் 12, இங்கு தாமான் செலாயாங் பாருவில், 43 வயது ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் தமது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தங்களுக்கு நேற்று காலை 8.40 மணிக்கு தகவல் கிடைத்ததாக கோம்பாக் வட்டார ஓசிபிடி அசிஸ்டண்ட் கமிஷனர் அலி அஹ்மாட் சாயிட் தெரிவித்தார்.
மரணமடைந்த ஆடவரின் சகோதரி தன் அண்ணனின் கதவைத் திறக்க முயன்றும், அவர் உட்புறமாக தாழிட்டுக்கொண்டதால் கதவைத் திறக்கும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று மாற்று சாவி செய்து கொண்டு வந்து கதவைத் திறந்து பார்த்ததில் தமது அண்ணன் இறந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இச்சம்பவத்தை காவல்த்துறை திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ளதாக ஏ.சி.பி அலி தெரிவித்தார்.