தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்

tamilnadu-fishing-boat-1

ஆகஸ்டு 26, ராமேஸ்வரத்திலிருந்து நேற்றுமுன்தினம் காலை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு  சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது திடீரென கற்களையும், பீர் பாட்டில்களையும் வீசி தாக்கினர். இதனால் பயந்துபோன மீனவர்கள், திரும்பி செல்ல முயன்றனர். இலங்கை கடல்  எல்லையில் நின்று கொண்டிருந்த கப்பல்களில் இருந்து வாட்டர் ஸ்கூட்டர், சிறிய ஸ்பீடு போட்களில் வந்த கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினார். ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவுகிறது.