டிஏபியின் தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு

டிஏபியின் தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு

Ganesha_Paris_2009

நவம்பர் 14, நெகிரி மாநில டிஏபி கட்சியின் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பு வரும் 16.11.2014 இரவு 7.00 மணிக்கு தொடங்கும், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கும் அருகாமையில் நடைபெறவிருப்பதாக செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா கூறினார். இந்தியா பாரம்பரிய உணவு வகைகளுடனான விருந்து உபசரிப்புடன், பணபாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. மாநில டிஏபியின் தலைவர் அந்தோணி லோக், உதவி தலைவர் சு.வீரப்பன், இளைஞர் தலைவர் அருள்குமார், அதன் சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் ஏ.கே தாஸ் ஆகியோருடம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரிடையாக வருகை புரிந்து பொது மக்களுக்கு தீபாவளி உபசரிப்பு வழங்குகின்றன. பொது மக்கள் திரளாக வரிகை தருமாறு நெகிரி மாநில டிஏபியின் துணை தலைவருமான குணா கேட்டுக் கொண்டார்.