ஜார்க்கண்ட் மற்றும் காஷ்மீரில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு.

ஜார்க்கண்ட் மற்றும் காஷ்மீரில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு.

election

காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. அதில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடந்தது.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 87 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அதுபோல ஜார்க்கண்ட்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், 13 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இந்த 28 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு  ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் மிகவும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். காஷ்மீரில் 1787 வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் வாக்காளர்கள் பயமின்றி வந்து வாக்களித்துச் சென்றனர்.