சைஃபுல் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர்

சைஃபுல் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர்

saiful

அக்டோபர் 29, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு விசாரணை இன்றும் நடைபெறுகிறது.

பரபரப்பாகக் காணப்படும் புத்ராஜெயா நீதித்துறை வளாகத்தில் சைஃபுல் புகாரியின் ஆதரவாளர்கள் இன்று சுமார் 200 பேர் திரண்டுள்ளனர். நேற்று 100பேர் காணப்பட்ட இடத்தில் இன்று 200 பேர் திரண்டுள்ளனர்.

அவர்கள் அன்வாரைக் கைது செய்! குதப்புணர்ச்சி செய்தவரைக் கைது செய்!, என்று கூச்சலிட்டனர்.