சிலாங்கூர் சுல்தானின் 69வது பிறந்த நாள்

சிலாங்கூர் சுல்தானின் 69வது பிறந்த நாள்

sultan-selangor

டிசம்பர் 11, பேட்டலிங் ஜெயா: மெண்ட்ரி பசார் அஸிம் அலி மற்றும் அவரின் குழுவிற்க்கு மக்கள் மற்றும் மாநிலத்தை முன்னணி நிலைக்கு கொண்டு செல்ல கூடுதல் கடின உழைப்பு தேவை என்றார் சுல்தான் சராஃப்வுதின் இரிஸ் ஷா.
சுல்தான் சராஃப்வுதின் இரிஸ் ஷா-வின் 69வது பிறந்த நாளான இன்று நீண்ட காலம் திட்டமிட்டு சரியான நபர்களை தேர்வு செய்து மக்கள் மற்றும் அடுத்த தலைமுறையினர் பயன்பெரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்றார் அவர்.
மேலும் அவர் தாங்கள் போதுமான அரசியல் செய்துவிட்டோம் தற்போது அதன் முடிவை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

சிலாங்கூர் சுல்தானின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு 102 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் புதிய சிலாங்கூர் மாநில முதல்வர் அஸ்மின் அலியின் பெயர் இடம்பெறவில்லை.
இஸ்காண்டார் அப்துல் சாமாட் மற்றும் டாக்டர் அஹ்மாட் யூனுஸ் ஹைரி ஆகிய இரு சிலாங்கூர் நகராண்மை கழக கவுன்சிலர்களுக்கும் டத்தோ படுக்கா மக்கோத்தா சிலாங்கூர் என்ற டத்தோ பட்டம் வழங்கப்பட்டன.