சிரியாவில் குண்டு வீச்சு: 50 ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிரிழப்பு

சிரியாவில் குண்டு வீச்சு: 50 ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிரிழப்பு

isis

டிசம்பர் 1, சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலில் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் ஈடுபட்டுள்ளன. அங்கு துருக்கி எல்லையில் உள்ள கொபானி நகரில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளின் நிலைகளின் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின.

அது தவிர ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக குர்தீஷ் படையினரும் சண்டை மற்றும் தற்கொலை தாக்குதல்களும் நடத்தினார்கள்.

இதுபோன்ற தாக்குதல்களால் நேற்று ஒரு நாள் மட்டும் கொபானி நகரில் 50 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர். இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் குர்தீஷ் படையை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.