கென்யாவில் 29 பேர் சுட்டுக்கொலை

கென்யாவில் 29 பேர் சுட்டுக்கொலை

bomb

கென்யாவில் கடந்த மாதம் லாமு கடற்கரை பகுதியில் உள்ள காம்பா சுற்றுலா நகரில் மர்ம நபர்கள் புகுந்து 60 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் நேற்று காம்பா, ஹின்டி ஆகிய நகரங்களில் மீண்டும் துப்பாக்கியால் சுட்டனர். அதில், 29 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை அல்–கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், மொம்பஷா குடியரசு இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது லாமு கடற்கரை பகுதியின் சுதந்திரத்துக்காக போராடி வருகிறது.