குவாலா லிபிஸ் மெராப்போ சாலையில் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் பலி

குவாலா லிபிஸ் மெராப்போ சாலையில் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் பலி

images (9)

நவம்பர் 21, குவாலா லிபிஸ் மெராப்போ சாலையின் 8-வது கிலோ மீட்டரில் பேருந்துடன் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர்.
அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் பெரோடுவா மைவியை ஓட்டி வந்த ஓட்டுனரான அகமது நோர் சலாஹுடின் அகமது சம்பேரி (வயது 29) தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலே உயிர் இழந்தார்.
தொடர்ந்து, அவரது மனைவி அஸியான் இஸ்மாயில் (வயது 32) மற்றும் அவர்களது பிள்ளைகளான அகமது அபினுலி அகமது நோர் சலாஹுடின், ஐரிஸ் அவுத்தா நோர் சலாஹுடின் ஆகியவர்களும் கிளந்தான் குவா மூசாங் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்தனர்.
கோலாலம்பூரிலிருந்து கிளாந்தானை நோக்கி வந்துக்கொண்டிருந்த கார் கிளாந்தானிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்துக்கொண்டிருந்த பேருந்தை மோதியது. எதிரும் புதிருமாக நடந்த இந்த விபத்தால் பேருந்தில் இருந்த 47 பயணிகளும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் என குவாலா லிபிஸ் போலிஸ் அதிகாரி அப்துல் ரசாக் ஹசான் தெரிவித்தார்.