கிளந்தானில் வெள்ளத்தில் 155பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்

கிளந்தானில் வெள்ளத்தில் 155பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்

images (10)

நவம்பர் 22, கிளந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காட்டிலும் சனிக்கிழமை 155-ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் 96 பேர் முலோங் ஆரம்பப்பள்ளியிலும் 34 பேர் தியோங் ஆரம்பப்பள்ளியிலும் மற்றும் 25 பேர் வாக்காவ் ராஜா ஆரம்பப்பள்ளியிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.

ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள சுங்கை கொலொக் நீர் மட்டத்தின் அளவு 9.05 மீட்டரிலிருந்து 8.70 மீட்டருக்கு குறைந்துள்ளது. அபாயமான நீர்மட்டத்தின் அளவு 9 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.