கிருஷ்ணகிரியில் யானை தாக்கி பலியான விவசாயின் சடலத்துடன் மக்கள் மறியல்

கிருஷ்ணகிரியில் யானை தாக்கி பலியான விவசாயின் சடலத்துடன் மக்கள் மறியல்

5

கிருஷ்ணகிரி அருகே கிராம மக்கள் யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயி சடலத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகாராஜகடை வனப்பகுதியில் நுழைந்த யானைகள் அங்கிருந்த விவசாயி சின்னப்பையன்(65) மற்றும் முனிவேலன்(35) ஆகயோரை சுற்றி வளைத்துத் தாக்கின. இதில் சின்னப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முனி வேலன் கிருஷ்ணகிரி அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யானைகளின் தொடர் அட்டகாசத்தால் ஆத்திரம் அடைந்த மக்கள் சின்னப்பையனின் சடலத்துடன் கிருஷ்ணகிரி – குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்தது.
யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும், உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.