கள்ளக்குடியேறிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ம.இ.கா

கள்ளக்குடியேறிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை  எடுக்க வேண்டும்: ம.இ.கா

Sivaraj1 (1)

டிசம்பர் 5, சாபாவில் கள்ளக்குடியேறிகள் மீது அரச விசாரணை ஆணைய (ஆசிஐ) அறிக்கை வெளியாகியிருப்பதை அடுத்து அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா இளைஞர் பரிவு கேட்டுக்கொண்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள சட்டவிரோத பெயர்களையும் நீக்க வேண்டும், என்று அதன் தலைவர் சி.சிவராஜ் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார். அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய அதிகாரிகளையும் விட்டு வைக்கக் கூடாது என்றாரவர்.