ஒபாமா வருகைக்கு முன் டெல்லியில் தாக்குதல் நடத்த பாக். தீவிரவாதிகள் திட்டம்

ஒபாமா வருகைக்கு முன் டெல்லியில் தாக்குதல் நடத்த பாக். தீவிரவாதிகள் திட்டம்

Barack Obama

டிசம்பர் 5, அமெரிக்க ஆதிபர் ஒபாமா வருகைக்கு முன் டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக ஒபாமா, இந்திய வரவுள்ளார். அவர் வருகைக்கு முன் டெல்லியில் பயங்கர தாக்குதல் ஒன்றை நடத்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக டெல்லி காவல் துறைக்கு உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடிப்பது தொடர்பாக டெல்லி காவல் துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மும்பையில் 166 பேரை பலி கொண்ட தாக்குதல் உட்பட பல தாக்குதலை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்தி இருப்பதால், டெல்லியில் மக்கள் கூடும் இடம் அனைத்திலும் அதிரடி படையினரை தயார் நிலையில் வைத்திருப்பது, என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையம், நாடாளுமன்ற வளாகம், குடியரசு தலைவர் மாளிகை அமைந்துள்ள பகுதி, இந்திய கேட், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மட்டும் இன்றி நாடு முழுவதும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் நடமாட்டம் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.