கமலுடன் நடித்தது என் பாக்கியம்: பார்வதி மேனன்

கமலுடன் நடித்தது என் பாக்கியம்: பார்வதி மேனன்

j16

தமிழில் ‘பூ’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானர் பார்வதி மேனன். இப்படத்தை சசி இயக்கியிருந்தார். இப்படத்தில் பார்வதி மேனன் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. சென்ற வருடம் தனுசுடன் ஜோடியாக மரியான் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் கமலின் உத்தமவில்லன் படத்தில் நடிக்க பார்வதிக்கு அழைப்பு வந்தது. இதனால் கமலுக்கே ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதோ என்று சந்தோசமாக ஓடோடி வந்து கதை கேட்டார் பார்வதி மேனன்.

ஆனால், கமலுக்கு மருமகளாக, அதாவது ஜெயராமின் மகளாக நடிக்கும் வேடம்தான் கிடைத்தது. இருப்பினும், கமலுடன் நடிக்க வேண்டும் என்ற கனவை இந்த படம் மூலம் நனவாக்கிக்கொள்வோம் என்று ஒப்பந்தமான பார்வதி மேனன், இப்போது நடித்தும் முடித்து விட்டார்.

கதைப்படி 21ம் நுற்றாண்டு பெண்ணாக நடித்துள்ள பார்வதிமேனனுக்கு கமலுடன் இணைந்து நடிக்கவும் பல காட்சிகள் உள்ளதாம். அதனால், தமிழில் இதுவரை மூன்று படங்களில் நடித்தபோதும், நான்காவது படத்தில் கமலுடன் நடித்து விட்டது எனக்கு சந்தோசமாக உள்ளது, அவருடன் நடித்தது என் பாக்கியம் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் பார்வதிமேனன்.