கடைசி நிமிடத்தில் பாக். பயணத்தை ரத்து செய்தார், மாலத்தீவு அதிபர்

கடைசி நிமிடத்தில் பாக். பயணத்தை ரத்து செய்தார், மாலத்தீவு அதிபர்

w1

மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், பாகிஸ்தான் நாட்டுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். நேற்று அவர் புறப்படவிருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துவிட்டார். கராச்சி விமான நிலையத்தில் அவரது வருகைக்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களையொட்டி அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுதான் அப்துல்லா யாமீன் பயணம் ரத்தானதற்கு காரணம் என தகவல்கள் கூறுகின்றன.