கடற்படை அதிகாரிகளை விடுவிக்க 5 மில்லியன் ரிங்கிட்: அபு சாயாஃப் கும்பல்

கடற்படை அதிகாரிகளை விடுவிக்க 5 மில்லியன் ரிங்கிட்: அபு சாயாஃப் கும்பல்

ltte_421354522

கடந்த ஜூலை 12-ஆம் தேதி, சபா புலாவ் மாபுலிலிருந்து கடத்தப்பட்ட மலேசிய கடற்படை அதிகாரி சாக்கியா அலெய்ப்-பை விடுவிக்க அபுசாயாஃப் தீவிரவாதிகள் 5 மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம் கோருகின்றனர்.

அபு சாயாஃப் கும்பல் கேட்கும் பிணைப்பணம் மிக அதிகம் என்பதால், சாக்கியாவை விடுவிப்பதற்கு மேலும் சில காலம் எடுக்கலாம் என சபா மாநில போலீஸ் கமிஷனர் டத்தோ ஜலாலுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இதுவரை சாக்கியாவிடமிருந்தும், கடத்தல்காரர்களிடமிருந்தும், இதர காவல்த்துறை அதிகாரிகளிடமிருந்தும் மொத்தம் 42 தொலைப்பேசி அழைப்புகள் கிடைத்துள்ளன.