ஓசூரில் பெங்களூர்-எர்ணாகுளம் ரெயில் தடம் புரண்டு

ஓசூரில் பெங்களூர்-எர்ணாகுளம் ரெயில் தடம் புரண்டு

India-train

பிப்ரவரி 13, கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் அதன் என்ஜின் தீப்பிடித்தது. இதில் பல பயணிகள் படுகாயமடைந்தனர்.

இன்று காலை 7.00 மணியளவில் ஓசூர் பகுதியில் உள்ள அநேகல் அருகே வந்தபோது இந்த ரெயில் தடம் புரண்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தடம் புரண்ட 7 பெட்டிகளிலில் இருந்து படுகாயமடைந்த பயணிகளை மீட்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு இதுவரை ஆறு ஆம்புலன்ஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.