ஒரே மலேசிய உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்: துணை பிரதமர்

ஒரே மலேசிய உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்: துணை பிரதமர்

semak+br1m

ஜனவரி 24, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே மலேசிய உதவித்தொகை RM500 விரைவில் வழங்கப்படும் என துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் உறுதியளித்துள்ளார்.
மேலும், மாநில அரசிடமிருந்து போதுமான தகவல்கள் கிடைத்தப்பின்னரே இந்த உதவித்தொகைக்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படும் என சபா, மெம்பாக்குட் பகுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முகிதின் யாசின் கூறினார்.

இதனிடையே, வெள்ளத்தின் நிலை சபாவில் தற்போது சீரடைந்திருந்தாலும் சரவாக்கின் சில பகுதிகளில் வெள்ளம் அதிகரித்திருப்பதினால் இன்று மேலும் இரண்டு பாதுகாப்பு மையங்கள் அப்பகுதியில் திறக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.