ஐ.எஸ் தீவிரவாதிகளோடு போரில் ஈடுபட்ட மலேசியத் தீவிரவாதி கொல்லப்பட்டார்

ஐ.எஸ் தீவிரவாதிகளோடு போரில் ஈடுபட்ட மலேசியத் தீவிரவாதி கொல்லப்பட்டார்

isis1

பிப்ரவரி 26, ஐ.எஸ்.ஐ.எஸ்  தீவிரவாதிகளோடு இணைந்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட மலேசியத் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அப்துல் சாமாட் சுக்ரி முகமது என்ற அந்த தீவிரவாதி ஐந்து மாதங்களுக்கு முன்பு சிரியப் படைகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்தார். அவர் துருக்கியில் சிகிச்சை பெற்று வந்த போதும் சிகிச்சை பலனின்றி பலியானதாகக் கூறப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளோடு போரில் கொல்லப்பட்ட 6-வது மலேசியர் தீவிரவாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.