ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிய வலிபர்கள் கைது

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிய வலிபர்கள் கைது

iss1

பிப்ரவரி 27, ரஷ்யாவின் கஜகஸ் தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் பகுதிகளை சேர்ந்த ஹசானோவிச் ஜுராபோவ் (24), அக்ரோர் சைதாக்மெதோவ் (19) மற்றும் அப்ரோர் ஹபிபோவ் (30) ஆகிய 3 பேரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூவரும்  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று மதியம் கென்னடி சர்வதேச விமானநிலையத்தில் சைதாக்மெதோவை போலீசார் கைது செய்தனர். அவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு தேவையான நிதிகளை திரட்டிக் கொண்டு சிரியாவில் இயக்கத்தில் சேர விரும்புவதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சைதாக்மெதோவ் தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வீட்டில் தங்கியிருந்த ஜுராபோவ் மற்றும் ஹபிபோவையும் போலீசார் கைது செய்தனர்.