எலி சிறுநீரக தொற்றால் எட்டு வயது சிறுமி பலி

எலி சிறுநீரக தொற்றால் எட்டு வயது சிறுமி பலி

Malaysia-dengue

டிசம்பர் 6, எலி சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு எட்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமிரா மைசாரா சிர் ஒமார் கான் என அடையாளம் காணப்படும் இச்சிறுமி, கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குடும்பத்தின் மூத்த குழந்தையான இவர், சுல்தானா பஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு அவரின் உடன் பிறந்தவர்களான நுர் ஷசானா மற்றும் சஹாரா ஆகியவர்களுக்கும் இந்த நோய்க்கான அறிகுறி தென்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமிராவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பயப்படுவதற்கு ஏதும் இல்லாத காரணத்தால் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்ட அமிரா, காய்ச்சல் இன்னும் அதிகரிக்கவே மருத்துவமனையில் தங்கினார்.
இதனிடையே, அமிரா மருத்துவ பரிசோதனையில் இருந்தபோது திடீரென வெள்ளிக்கிழமை இறந்துள்ளார். இதனால் அவரின் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.