உலுசிலாங்கூர் மாவட்ட நாம் அறவாரியத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா 14 ஆகஸ்ட் 2014 அன்று பத்தாங்காலி டத்தோ அப்துல் ஹமிட் லீகாமஸ் அரங்கில் உலுசிலாங்கூர் மாவட்ட நாம் அறவாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலசுந்திரம் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.
இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சரும், நாம் பேரியக்க அறவாரியத்தின் நிறுவனருமான டத்தோ M.சரவணன் உலுசிலாங்கூர் மாவட்ட நாம் அறவாரியத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
சிலாங்கூர் மாநில நாம் அறவாரியத்தின் தலைவர் திரு.சுப்ரமணியம் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் அரசாங்க சார்பற்ற இயக்கங்களின் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.