இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை!

இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை!

1

கன்னியாகுமரி அருகே மைலாடி மிஷன் விளையை சேர்ந்த மெர்லின்(28), நாகர்கோவில் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் ஜெயசெல்லா மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.மெர்லின் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி ஜெயசெல்லா மற்றும் அவரது தாய், தந்தை மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து்,விசாரணை நடத்தி வருகின்றனர்.